Saturday 6 August 2011

மனிதா யார் நீ - 7

கடவுள் கருணை, பணம் பதவி,நம்பிக்கை,நாணயம்,
நேர்மை,நியாயம் ,வெற்றி,தோல்வி, ஆசை,பாசம்
கடவுள்,ஆன்மிகம் __என எல்லாம் வாழ்வின் ஆதாரத்தை தேடும் அளவுகோல் 
வாழ்வு___ யாரறிவர் வாழ்வென்பதை 
வழி வகுத்த பாதையை பற்றி நாம் செல்கின்றோம் 
ஆதாரம் ஒன்றை ஒன்று பற்றி நிற்பது.
பற்று__ஆசையும் ஆகும், ஆதாரமும் ஆகும்.
ஆசை, பற்றியது எதுவோ   பற்றிக்கொள்ள தூண்டுகிறது 
ஆதாரம் ___பற்றிய ஆசையின் வழி தொற்றிக்கொண்டு செல்ல நினைப்பது 
செல்லும் இடமும், செல்லும் தூரமும் நாம் அறியோம்
அறிந்து கொள்ளும் முயற்சி கடவுளின் மேல் பற்று,
கடவுள் அறியுமோ எல்லோரும் பற்றுவது தாம் என்று,
அறியாமையில் இதுவும் அழகன்றோ?
பற்றுவது யாதென்று யாமும் அறியோம், 
பற்றியது யாரென்று அவனும் அறிவானோ?
யாதகிலும் நம்பிக்கையை பற்றுவோம் திறக்கும் கதவுகள் 
திறக்கட்டும் ,பேரானந்தம் பிறக்கட்டும் 
எதிர் நோக்குவோம்    ஒளி மயமான எதிர்காலத்தை ,
அன்புடன் சுபாரமேஷ் 

No comments:

Post a Comment