Friday 12 August 2011

maayakkannadi

மாய வித்தைக்காரனின் மாயவிளையாட்டு போல 
என்னன்ன மாயங்களை காட்டுகிறது மாய மனது 
எத்தனைஎத்தனை எண்ணங்கள் 
எத்தனைஎத்தனை கோபங்கள் 
அளவிடமுடியாத ஆனந்தங்கள்
அள்ள இயலாத சோகங்கள் 
இன்னும் எவ்வளவு 
வருத்தங்களோ, விகாரங்களோ
மழைக் கால மேகங்கள் வானை 
மறைத்து மறைத்து போவது போல
மனதில் வந்து வந்து போகின்றது 
மாயக்கரனின் மாயக்கண்ணாடி போல
மனதைப் பார்க்க முடிந்தால் ___அடுத்தவர் 
மனதையும் படிக்க  முடிந்தால்
அந்த நிலை இன் பிரதிபலிப்பு 
இயற்கை இன் சீற்றத்திற்கு முன் எம்மாத்திரம் ?

Saturday 6 August 2011

மனிதா யார் நீ - 12

ஆசைக்கு அளவுகோல் யாராலும் அளவிடமுடியாது
அளக்கும்  அளவின் நீட்டலும் குறைச்சலும் 
அவரவர்  நிர்ணயித்த அளவின் நிர்மாணம் .
நிர்மாணித்ததை அளக்கும் பக்குவம் எளிதல்ல 
எத்தகை துன்பம் தோன்றின் துவளாத மனமும் உண்டோ
ஆசை இன் அளவு போல் துன்பத்தின் அளவும் அளவிட முடியாதது
பால்நிறைந்த பாத்திரத்தில்  ஒரு துளி கள் போல்
பாசத்தின் அளவில் ஒரு சிறு இடறலும் 
பாத்திரத்தையே கள் ஆக மாற்றும் ___ஆனால் 
கள் யின் இயல்பு மாசு
பாலின் இயல்பு தூய்மை 
எத்தகை மாசு படிந்தாலும் பாலின் இயல்பை மாற்றவா முடியும் 
அன்பு கொண்ட மனதில் ஹிம்சை இர்ருகாது 
ஆனால் துயரம் கொண்ட மனதை துன்பமே ஹிம்சையக்குகிறது 
துன்பத்தை தொலைக்க தூய உள்ளம் இர்ருந்தலும் கூட போதாது
முன்பு சொன்னப்படி அசாத்ய அதிர்ஷ்டமும் கூட வேண்டும்தான் 
காலம் போகும் போக்கில் அதிர்ஷ்டத்தையும் நம்பத்தான் வேண்டுமோ 
 அதிர்ஷ்ட காற்று எப்படி வீசுகிறது என்று பார்போம் 
இப்படிக்கு
சுபாரமேஷ் 

மனிதா யார் நீ - 11

ஆனந்தமாய் ஒருவன் அமர்ந்து இருந்தான் ஆற அமர,
அருகில் சென்று அறிந்தால் ,சுகமாய் அடிகிறது காற்று,
என் அதிர்ஷ்டம் என்றான் 
என்னஇது காற்றடிக்க கூட அதிர்ஷ்டம் வேண்டுமோ 
எல்லமிருப்பவனின் இயல் நோக்கு கூட 
இல்லாதவனுக்கு அதிர்ஷ்டமாக காண்கிறது 
பொதி சுமக்கும் கழுதைக்கு தெரியாது 
சில சமயம் பொதியில் 
உப்புக்கு பதில் பஞ்சும் இர்ருகுமென்று
கழுதைன் அதிர்ஷ்டத்துக்கு யார் காரணம் 
யாருக்கு என்ன கிடைக்குமென்பது 
அவன் போட்ட கணக்கு 
என்ன கிடைக்குமோ வேண்டாமென்றாலும் 
கிடைத்துத்தான் ஆகும் 
கிடைக்காது எனில் எத்தகை முயன்றும் கிடைக்காது 
கிடைதவனை சொல்லுவான் அதிர்ஷ்டகாரனென்று 
கிடைக்காதவன் அறிவானா
இந்த பாகுபாடு படைத்தவனால் வந்த வினை என்று
எனக்கும் குழப்பம்தான் 
சென்னை வெயில் தேவலையா சிங்கை வெயில் தேவலையா என்று 
அன்புடன்
சுபாரமேஷ் 

மனிதா யார் நீ - 10

பூமித் தாயின் மடியில் தான் எத்தனைஎத்தனை 
செல்வங்கள் ....
ஒன்றில் ஒன்று எது சிறந்தது,
பிரித்துதான் பார்க்க முடியுமா?
தாயின் குழந்தைகள் பத்தானாலும் 
பத்தும் முதல் குழந்தைதான் தாய்க்கு 
இறைவனின் எண்ணற்ற குழந்தைகளில் 
மனிதராகிய நாமும் குழந்தைதான் 
குழந்தையின் சிரிப்பு இறைவனிடம் தேடல் 
குழந்தையின் கோபம் உரிமை 
இறைவனை அறிய அடையும் வழி 
குணமாகிய மனித மனம் 
அறியும் குணமோ தங்கத்தை வார்த்தது 
தங்கத்தின் தரமோ தணலில் 
தரத்தில் உயர உயர தங்கமோ தஹதஹகிறது 
குணத்தின் தரத்தை தங்கத்தில் காண 
மனதையும் இடலாம் புடத்தில் 
புடத்தில் போட்ட தங்கம் பொன் நகையகிறது
தங்கதச்சன் கைகளில் 
புடத்தில் போட்ட மனமும் ஆகலாம் பொன்னாக
தங்கதச்சனாம் இறைவனின் கைகளில் 
தாய் அறிவாள் தன் மகவின் 
கனவை, ஆசையை 
தானே வழியும் வகுப்பால் தானே அவ்வளவும் நிறைவேற 
தாய் அறியாத எல்லாமும் அறிந்த இறைத் தாயும் உண்டு,
எல்லாமும் ஆனா தாயே இறைவி யாய் ஆவதும் உண்டு 
யாதகிலும், காண்பது யாவும் நல்ல மனதின்   வாயிலே
வேண்டியதை பெறுவோம் இறைவன் வழியிலே 
வழியை தேடும்
சுபாரமேஷ் 

மனிதா யார் நீ - 9

முயற்சி திருவினையாக்கும் ___வள்ளுவன் வாக்கு 
திரு_கடவுள்,வினை_வாங்கி வந்த வரம் ,ஆக்கும்_அடைவது,கிடைப்பது,
ஆக்குவதும்,அழிப்பதும் அவன் செயல் என்றாலும் 
வாங்கி வந்த வாழ்வு வரமா /சாபமா?
எவர் வாழ்விலும் ,தெளிந்து,தெளிந்து தேடினாலும் 
குழம்பி,குழம்பி மனம் அமிழ்ந்துதான் கிடக்கும் ஆழத்தில் ___
எது வாழ்வு,எது சரி, எது தவறு,என்று ,
மனம் தெளியாதா  தெளியாதா  என்று தேடும் போது
சிறிதளவாவது தெளியுமாயின்  அது,  
அள்ள,அள்ள வற்றாததும் ,எடுக்க, எடுக்க, குறையததும் 
சிற்றறிவுக்கு எட்டியதும் ஆவது __அன்பும் அறிவும் 
பொருளும் புகழும் காலத்திற்கேற்ப 
கொடுத்தும் எடுத்தும் குறைந்துவிடும் 
ஆன்மீகத்திலும் ஒரு பொழுது சலிப்பும் தோன்றலாம் 
(கடவுள் உள்ளனா என்று சில சமயம் தோன்றும் நாத்திக உணர்வில்)
ஊற்று தானைய் ஊறினாலும் சிறு முயற்சியின்றி 
வெளி வர இயலாது 
அஹ்தே அறிவும் அன்பும் 
அறிவுக்கு தெரியும் அன்புதான் அனைத்தும் என்று 
தெரிந்தும் ஏற்புடை நெஞ்சமின்றி 
அகந்தையும்,ஆணவமும் கண்ணை கட்டுகிறது. 
அகக்கண் அறிந்தும்,புறக்கண் திறக்க வேண்டாமோ 
கண் இல்லாமல் கால் போன பாதையில் போவது,
பாதி வழியிலேயே மீதியையும் கடக்க நினைப்பது போலதான் 
கண்ணை திறந்து நடந்து வாழ்வை வரமாக மாற்றும் முயற்சியில் 
சுபாரமேஷ்  

மனிதா யார் நீ - 8

ஆனந்த தண்டவமோ ஆழி ஊர்த்துவ தண்டவமோ
அடி முடி தேடி அலையவிட்ட ,

ஆடிய பாதத்தை தூக்கிய அம்பலவனனுக்கும் 
அரங்கனை போல் ஆசை வந்தது போலும்,_அடி அளக்க 
 தூக்கிய பாதம் விண்ணளக்க ,கண்ணசைவிலேயே 
சிறு கட்டேறும்புக்கும் படியளக்கிறான் 
ஆடியவன் ஆட்டியும் வைக்கிறான் அனைவரையும் பொம்மையை  போலே 
ஆடும் பொம்மைக்கு தெரியாது ஆடும் சூத்திரம் அவனிடதிலென்று 
ஆட்டமோ சுவாரசியம் பொம்மைக்கோ பெருமிதம் 
பாவம், தன் கயிற்றின் நுனி தன்னிடம் இல்லை என்று 
அந்த பொம்மலாட்ட பொம்மைக்கு தெரியாது     
அடி எடுத்து வைக்கும் குழந்தைக்கு 
அடுத்த அடி ஓட்டம்தான் 
ஐந்தில் ஆரம்பித்தது ஆயுள் வரை
ஓட்டம் ஓட்டம் தான் 
ஓடும் ஓட்டம் எதற்காகவோ, எதையோ தேடித் தேடி
நாடிய பொருள்மேல் நாட்டம் கொண்டும் 
தேடிய பொருள்மேல் மென்மேலும் தேடல் கொண்டும் 
கடைசிவரை நிற்காத ஓட்டம் 
ஒரு முறை தேடல் விடையில் சுவை காண 
விடமுடியாது வாழ்க்கை முழுதும் தேடல் ஓட்டம்தான் (சிறந்த உதாணரமாக இந்த கவிதை தேடலையும் சொல்லலாம் )
கரை சேர கடவுளை பற்ற ,ஆன்மீக தேடலும் ஓட்டம் போல் தோன்றுகிறது
ஓடி ஓடி களைத்தாலும் ,தேடுவது என்னவென்றே தெரியாமல் தேடுவதும் 
கிடைப்பதும் என்னவென்று தெரியாமல் இருப்பதும் 
சுகம்தான்,இன்பம்தான் 
உலகமே மாயை என்னும் உலகில் மாயையை தேடுவது வியப்புதான்  
ஆனால் நீர்க்குமிழிபோல் மாறி மாறி  கிடைக்கும் சுகமும் துக்கமும் 
வாழ்வின் சுவாரஸ்யமான பக்கங்கள்தான்  
அன்புடன் 
சுபாரமேஷ் 

மனிதா யார் நீ - 7

கடவுள் கருணை, பணம் பதவி,நம்பிக்கை,நாணயம்,
நேர்மை,நியாயம் ,வெற்றி,தோல்வி, ஆசை,பாசம்
கடவுள்,ஆன்மிகம் __என எல்லாம் வாழ்வின் ஆதாரத்தை தேடும் அளவுகோல் 
வாழ்வு___ யாரறிவர் வாழ்வென்பதை 
வழி வகுத்த பாதையை பற்றி நாம் செல்கின்றோம் 
ஆதாரம் ஒன்றை ஒன்று பற்றி நிற்பது.
பற்று__ஆசையும் ஆகும், ஆதாரமும் ஆகும்.
ஆசை, பற்றியது எதுவோ   பற்றிக்கொள்ள தூண்டுகிறது 
ஆதாரம் ___பற்றிய ஆசையின் வழி தொற்றிக்கொண்டு செல்ல நினைப்பது 
செல்லும் இடமும், செல்லும் தூரமும் நாம் அறியோம்
அறிந்து கொள்ளும் முயற்சி கடவுளின் மேல் பற்று,
கடவுள் அறியுமோ எல்லோரும் பற்றுவது தாம் என்று,
அறியாமையில் இதுவும் அழகன்றோ?
பற்றுவது யாதென்று யாமும் அறியோம், 
பற்றியது யாரென்று அவனும் அறிவானோ?
யாதகிலும் நம்பிக்கையை பற்றுவோம் திறக்கும் கதவுகள் 
திறக்கட்டும் ,பேரானந்தம் பிறக்கட்டும் 
எதிர் நோக்குவோம்    ஒளி மயமான எதிர்காலத்தை ,
அன்புடன் சுபாரமேஷ் 

மனிதா யார் நீ - 6

மனிதனை தேடுவதா?ரொம்பவும் கடினமான காரியம்,
ஏழு வரங்கள் அல்ல ஈரேழு வருடங்களனாலும்விடை காண முடியாத வினா 
மனித உருவகம்தான் 
மனம் காட்டும் பளிங்கு மனதை காட்டினால்,
அழகு முகம் தெரியாது,அடிக்கடி தெரிவது மிருக விகாரம்தான்..,
சிறு திருத்தம்
மனம் அழகாயிருந்தால் எல்லாம் அழகாய் தெரியும்
அங்கு மனிதனும் அழகாய் தெரிவான் 
இல்லாவிடில்,அழகான மனிதனும் அகோரமாய்,மிருகமாய் தோன்றுவான்
வினாவுக்கு விடை இல்லாமல் இது என்ன விளக்கம் என்று தோன்றுகிறதா 
மனிதனை தேடுவது கடினம் ஆனால்மனிதனாக முயற்சிப்பது எளிதல்லவா?
மனிதனை அடையாளம் காட்ட ஆன்மீகத்தையும்  ஒரு கருவியாக அல்லது காரணமாக கொள்ளலாம்
ஆன்மீக தேடலுக்கு அனைத்து இன்பங்களும் தேவை என்று கூட தோன்றுகிறது
சிறு மலரையும் சிறு வண்டையும் காற்றையும் மழையையும் 
கடலையும் வானையும்காதலையும் கடவுளையும்
சிறு குழந்தையின் சிரிப்பையும்,நரை கிழவன் நடுக்கத்தையும்
ரசிக்க எல்லா இதயதுக்குளும் சிறு துளி ரசனையாவது இர்ருக்க கூடும்
அந்த சிறு துளியில் தான் தெரிகின்றானோ மனிதன்....
இல்லையென்றால் எல்லா கடவுளும் அவதாரமாக வந்து மனிதபிறவி எடுத்தது எதற்கோ?
இன்பங்களையும்,துன்பங்களையும் ரசிக்கதானோ
மனிதனாக பிறக்கவும் மாதவமும் செய்திடல்  வேண்டும் தான்  ,   
மனிதனுக்குள்ளேயே மனிதனை தேடினால் கிடைப்பானோ என்னவோ 
தேடிபார்போமா ????

மனிதா யார் நீ - 5

எங்கு நோக்கினும் பரிதவிப்புகள் எங்கும் துயரம்
எந்த பக்கம் பார்த்தாலும் 
ஆழ்ந்த துக்கமும்,அளவில்லாத துயரமும்
மாமனின் மடலிலும்,சிறிய தந்தைன் சிற்றோலைலும்
கண்டேன் வேதனைன் ஓலத்தை,
உலகமே ஆர்பரிக்கும் ஆதங்கத்தில் 
என் சொந்த சோகமும் வெளிப்பட்டு விடுமோ என்ற ஐயம்
ஐயம் எதனால்
மனிதனா மகானா என்ற தொடங்கிய நிலைக்கே செல்வோம் 
தனி மனித துயரம் ,தன் மனைக்கும்,தன் மனிதருக்கும்
பிந்தையது __உலகினுடியாது, 
இன்னும் முந்தைய நிலைக்கு செல்வோம் 
கை கால்களை உதைத்து அடம் பிடிக்கும் குழந்தைன் நிலையில் மனிதன்........
எத்தனை மகான்கள் பிறவிப் பயனையும், பிறவிகடனையும்
தெள்ளதெளிவாக அறுதியிட்டு காண்பித்தாலும் 
ஒரு ராமனும்,ஒரு கிருஷ்ணனும்,ஒரு ராமகிரிஷ்ணனும்
ஒரு ரமணரும் ஒரு சாயிய்  மகானும்
பிறவி பெருங்கடலில் உரைத்து உணர்தியது
பிரிவும் பெருந்துயரும் சரஈரதிர்கேயன்றி 
ஆன்மாவுக்கல்ல ,,,
அவர்தம் அடைந்த சரிரதுன்பம் அனைத்து உயிர்களும் (மகானையும் விட்டு வைபதில்லை இந்த சரிர துன்பம்) 
உணரவேண்டிய பிறவி பெருவினை,
மனித குழந்தைக்கு புரிகிறது தெரிகிறது,
என்ன பயன் __
அடம் பிடிக்கும் குழந்தை அடம் பிடிகிறது  (அடம்_ எல்லாம் தெரிந்துகொண்டே கிடைக்காது என்றாலும் தனக்குத்தான் எல்லாம் வேண்டும் என்ற நிலை) 

நான், எனது,என்னுடையது என்று ___
ஆன்மாவையும் தனுடியாதக்கி, 
ஆன்மாவோ ____விட்டு பறக்றது வந்த வேலை முடிந்ததென்று,,,,
என்றும் அன்புடன்
சுபாரமேஷ் 

மனிதா யார் நீ - 4

............எல்லாம் அவன் தான்,எல்லாம் அவன் செயல்தான் 
அதனால்தானோ
மனிதரில் தெய்வம்சத்தை பார்க்கும்போது,
ஆஹா என்னவொரு தெய்வபிறவிஎன்றும்,
தெய்வத்தின் வடிவாக மனிதனை பார்க்கும்போது
மனுஷே தெய்வரூபனே என்றும்-மலைதுபோகிறோம்
வசதியாய் கடவுளும் விளையாடுகிறான் 
மனிதனில் மகனாகவும் மிருகமாகவும் ,
ஒரு நிமிடம் கலங்கி பார்க்கும்போது
கடவுளே இர்ருகிரான  என்று அச்சமும், மயக்கமும் தோன்றுகிறது,........
சில பல சுனாமிகளையும்,சிலபல போர்களையும்(தமிழிழ)
இன்னும் அறுதியிட்டு கூறமுடியாத பல சில நிகழ்வுகளும் 
கண்ண்களில் தோன்றித் தோன்றி மறைய  
 உண்மையாகவே எங்கு சென்று தேடுவது 
வாழ்வின் அர்த்தத்தை என்று குழம்புகிறது மனது 
உமது விடை பார்த்து மனம் தெளிய 
காத்திருக்கும்
சுபாரமேஷ் 

மனிதா யார் நீ - 3

வாழ்வின் கதையரியா விழைந்து காத்திருந்தேன் 
விடையுன்று கிடைத்தது,
உன் வழிப் பாதை புலப்பட்டது.
சரிஎது,தவேறேது, நேற்றேது,நாளிது,
தரம் பிரிப்பது தனி மனிதனின் மனமே
உன் வழி,உன்பாதை,உன் உறவு,உன் மனம்,-ஏதாகிலும்
நீ உரைத்தஉறவுகள் உன் பின்னே நிக்கும்.
ஒவ்வுறு வீட்டிலும் நீ காணலாம் ஓரிரண்டு
மகானை(காந்தி மகானை)
குழந்தை அடி பயில
ஆகும் நேரம் என்று அறிவேன்-ஆதல்லல்  அயர்தேன் சற்று
குழந்தை வைத்துவிட்டது மூன்று அடிகளை.
ஓடிவந்தேன் கை பிடிக்க,குழந்தை பார்த்து சிரித்தது,
மக்ழிந்து பார்த்தேன்
கண்களில் கவலை.
குழந்தை கண்களில் கவலைய?கவலை கொண்டேன்.
மனித நேயத்தை பற்றிய கவலை என்றதும்
,விண்ணையும்,மண்ணையும் ஈரடி ஆலன்தது
குழந்தையன்றி யார்?
அதுவே பார்த்துக்கொள்ளும் என்ற நிம்மதியுடன்
அடுத்த அடிக்காக காத்திருக்கிறேன்
இப்படிக்கு
சுபாரமேஷ்

மனிதா யார் நீ - 2

ஆஹா ஆஹா
எங்கே எங்கே என்று எதிர் நோக்கும் கால்
வந்தே விட்டான் மனிதன் மனதை மயக்க
மயங்கும் மனதை மயங்க விடாமல்
கனவுலகுக்குள் கொண்டு சென்றால்
என் செய்வேன் நான்
என் செய்வேன் நான் என் நிலையில்
தாய் தந்தை முகம் கண்டு
தனிமையில் விட்டு போகும் நிலையில் (தாயுடன் ,பிள்ளையையும்)
கனவிலும் நினைவிலும் தவிக்கும் மனதுடன்
சுபாரமேஷ் 

மனிதா யார் நீ - 1

மனிதா யார் நீ  என்ற வினாவிற்கு மற்றுமொரு விடை முயற்சி...
எந்த குழன்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே _அது
நலவனவதும் தீயவனாவதும் அன்னை  வளர்ப்பினிலே
என்ற கவிஞரின் கூற்றை பொய்யாக்கும் காலத்தில்
எங்கே சென்று தேடுவோம் மனிதனின் நிலைகளை ?
 குழவியல் தேடுவோம? வாலிபத்தில் தேடுவோம?முதுமையில் தேடுவோம?வறுமையில் தேடுவோமா?வசதியில் தேடுவோமா?
எங்கு நோக்கானும் ,
எங்கும் ஓர் மகானும்(கடவுள்)
எங்கும் ஓர் மா_பாதகனும்(மிருகம்)
காணலாம்,
காலத்தின் கோலத்தில்
இறைவன் செய்த ஜாலமோ?(ஒருவனுக்குள்)
மனித மனதின் மிருகம் செய்த வித்தையோ?
எதுவாகினும்,
தங்கள் தேடும் நிலைகளை கண்டறிய
தங்களின் வினாவிற்கு
யாம் தாழ்மையுடன் உரைக்கும் உரை....
அன்பும் இனிமையும் பாசமும் நிறைந்த உலகில் மகானாய்
அல்லாத உலகில் மிருகமாய் உருவெடுத்து கலங்கச் செய்கிறது
கலகதே மனமே காலமே அதை சரி செய்ய எதிர் நோக்குவோம் வருங்காலத்தை
அன்புடன் இன்னுமொரு விடை முயற்சி
சுபாரமேஷ்    

anbu

கொடுக்க கொடுக்க குறையாத அன்பும் 
குறைந்துதான் போவதுண்டு 
அன்பால் பிறரை அடக்கி அன்பு செய்யும்போது 
அடக்கியும் அடிமைபடுத்தியும் 
என் அன்பில் அடங்கியும்தான் போக வேண்டும் 
என்ற அன்பின் ஆளுமையில் 
சிறுமையும் பட்டுத்தான் போகிறது 
அளக்கவும் முடியாத பெருமிதமான அன்பு 
தானே அடங்கும் அன்பில் பக்தின் நெகிழ்வு காணலாம் 
கொடுக்க கொடுக்க பாரம் குறைவது போல 
கொடுக்கும் அன்பின் பாரம் குறைந்தால் தான் என்ன 
ஆனால் அன்பின்  பாரத்தின் அளவு ,
ஒரு சிறு மயிற்பீலி இன் பாரம் பெரும் வண்டியையே சாய்த்துவிடும் 
உண்மைக்கொண்டது.
(பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் 
சால மிகுத்து பெய்ன்)
அதுபோல அது ஊற்று நீர் போலல்லவா 
ஊறி ஊறி நிரம்பி வழிந்து 
தானும் மூழ்கி அனைத்தையும் மூழ்கச்செய்கிறது 
மீளவே முடியாமல்.

Thursday 4 August 2011

uravugal

அண்ணனாம் ,தம்பியாம்
அன்பை பொழியும் அன்னையாம் தந்தையாம் 
தாயன்பு அனைத்தையும் தன்னிலே கொண்ட தமக்கையாம் 
தானே எப்பொழுதும் அனைவர்க்கும் குழந்தையாய் தங்கையாம் 
தான் வாழும் கூட்டிலே,தன்குஞ்சுகளோடு 
தன் வாழ்வு குதூகலம்தான் 
தெருவிலே தெரு புழுதியிலே 
வீட்டிலே ,தன் கூட்டிலே 
மெய்யான சண்டையும் சிறு மணர்த்துகளாக 
பொய்த்து போகும் பாசக்கட்டு 
தான், தன் கூடு, தன் நிறைவு எனும்போது 
தான் அறியாமலும் சில வேளை தான் அறிந்தும் 
பிறக்கும் ஒரு சில சொற்களும் செயல்களும் கூட
பல சமயம் நெருப்பாய்ச்சுடும் மாயமென்னவோ?
வழியாய் வரும் வாழ்கை க் கூட்டுக்குள் 
தானும் தலைவன் /தலைவியாகி தன் குஞ்சுக்கு 
தாய் தகப்பனாகும் போது
தானே அன்புக் கூடகிறான்,
தான் வளர்ந்த அழகான வீடு,
அன்புக்கூடு களைந்து கிடப்தறியாமலே 
வேர் கொண்ட மரமும்,மரம் கொண்ட கிளைகளும் 
கிளை கொண்ட மலரும் ,மலர் கொண்ட கனியும் 
மணத்து சிறக்கும் போது 
கண்ணுக்கு தெரியாத வேர் கொண்ட 
வாசமும் புலப்படுமோ 
அல்லது வேருக்கு வாசமும் உண்டோ 
என்றும் நினைக்கவும் தோன்றுமோ?