உலை கலத்தின் வெப்பம் போல்
உதிரத்தின் வெப்பமும் அதிகம்தான்,
உடம்பிற்குள்ளே ஓடும் போது,
பகலை பார்பதை விட
பதுங்கு குழியை பார்பவர்களுக்கு
உதிரமும் உறைந்துதான் கிடக்கிறது உரையமலே,
இயல்பை விட்டு,,
இயல்பே இயல்பை மறந்துபோகும்போது
எழிலான இலங்கைக்கு என்றைக்கு எழுச்சி ?
காற்றிலே பறக்கும் தூசி துகள்கள்
ஆங்காங்கே விழுவது போல்
அகிலமெங்கும் அலைகழிந்திடும் மனித துகள்கள்
காற்றிலேயே மறைந்திடுமோ அன்றி ,
காற்றிலே பறந்த விதை போல
மண் பற்றி ,வேர் கொண்டு விருக்ஷமகுமோ?
வாழ்வில் கனவு காணும் போது
வாழ்வே கனவாகும் நியாயமென்ன?
நாம் நம்மையே நினைத்து
புலம்புவதகே ஒரு யுகம் வேண்டும் போது
இன்னொரு யுகம் எடுத்தால்தான்
எல்லாம் கண்ணில் காணும் போல,
அளவற்ற மகிழ்வு காணும் போது
சிறு துளி துயரமும் கொண்டால் _அடுத்தவர்காக
கண்ட மகிழ்வும் சிறு துளி கூடவும் செய்யுமோ?
பார்ப்போம்...............