மெழகுவர்த்தி __உருகி உருகி கரைந்து,
தன்னையே வருத்திக்கொண்டு ஒளிகொடுக்கும்.
தன்னையும் அழித்துக்கொண்டு
தான் கொடுத்த ஒளியை யும் நிறுத்தி விடுகிறது
தான் போன பின்பு
சந்தன மரமோ
தன்னையே வருத்தி இழைத்து இழைத்து
தேய்க்கும் போது தான் கரைவதுடன்
தன்னை சுற்றிலும் மணத்தை ப்பரபுகிறது.
தேய்ந்து மறைந்தாலும் மணத்தை விட்டுச் செல்கிறது.
மெழுகு வர்த்தியாய் இருப்பதை விட
சந்தனமாய் இருக்கவே விரும்புகிறேன்
No comments:
Post a Comment